கொரோனா தொற்று அபாயம் காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பமாகியுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி 6வது வெற்றியை பதிவு செய்துள்ளதன் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இன்டியன்ஸ் அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்களை பெற்றது.
சென்னை அணி சார்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 58 பந்தில் 88 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
157 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது.
இதையடுத்து சென்னை அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி பெற்றுள்ள 6வது வெற்றி ஆகும். இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது சென்னை அணி.
30 லீக் போட்டிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் 8 ஆட்டங்களில் 2 தோல்வி, 6 வெற்றி என 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பெங்களூரு ரோயல் சேலஞ்ரஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, சென்னை