இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (28) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை சந்தித்துள்ளார்.
அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள போதிலும், கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து இரு தரப்பும் வெளியிடவில்லை.