Thursday 28th of March 2024 04:35:06 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை  சீற்றம் கொள்ள ஆரம்பித்தது!

ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை சீற்றம் கொள்ள ஆரம்பித்தது!


ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை முழு வீச்சில் சீற்றம் கொள்ள ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கிலாயூ எரிமலை நேற்று புதன்கிழமை முதல் தீவிரமாக சீற்றம் கொள்ளத் தொடங்கியுள்ள நிலையில் இதனால் இப்பகுதி குடியிருப்பாளர்களுக்கு உடனடி ஆபத்து இல்லை என அதிகாரிகளை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் எரிமலை முன்னெச்சரிக்கையை ஒரேஞ்ச் வர்ணத்தில் இருந்து சிவப்பு உயர் ஆபத்து எச்சரிக்கை நிலைக்கு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நேற்று உயர்த்தியுள்ளது.

எரிமலை தற்போது சீற்றம் கொண்டுவரும் பகுதிக்கு அருகில் குடியிருப்புக்கள் இல்லை என ஹவாய் நியூஸ் நவ் தெரிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE