Thursday 18th of April 2024 06:53:03 PM GMT

LANGUAGE - TAMIL
.
தொழில் வழிகாட்டுதல் வாரம் - பேச்சுப் போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தகுதி!

தொழில் வழிகாட்டுதல் வாரம் - பேச்சுப் போட்டியில் முல்லைத்தீவு மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தகுதி!


'தொழில் வழிகாட்டுதல் வாரம்' பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்று முல்லைத்தீவு மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பிரதான செயற்பாடான தொழில் வழிகாட்டல் தொடர்பான எண்ணக் கருவினை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நடப்பாண்டிலிருந்து "தொழில் வழிகாட்டல் வாரத்தை" ஒக்டோபர் 04ம் திகதி தொடக்கம் 10ம் திகதிவரை நடாத்துவதற்கு மனிதவலு வேலை வாய்ப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு இடைநிலை(தரம் 09,10,11) பாடசாலை மாணவர்களிடையே நிகழ்நிலை(Online) முறையியூடாக நாடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கல்விப் பொதுத் தராதர சாதாரண தரத்தைச் சேர்ந்த நான்கு மாணவிகள் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவரஞ்சன் கோகுலறூபி, முல்லைத்தீவு றோமன் கத்தோலிக்க தழிழ்க் கலவன் பாடசாலை மாணவியான எம்.அபிசாயினி, குமுழமுனை மகாவித்தியாலய மாணவியான எஸ்.பவித்ரா, கணேஸ்குமார் தமிழினி ஆகிய மாணவிகளே இவ்வாறு தேசிய மட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE