நாட்டில் விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான கோவிட்-19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் தொடக்கிவைக்கப்பட்டுள்ளன.
கோவிட் 19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை திங்கட் கிழமை 04.10.21 மாவட்ட மருத்துவமனையில் ஏற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கீழ்வரும் நோய்நிலைமையுள்ள சிறுவர்களுக்கு இத்தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.
1. நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாட்டு நிலை
2. வேறு நோய்நிலைமைகளால் ஏற்பட்ட நோய் எதிர்ப்புக் குறைபாடு ( இரத்தப் புற்றுநோய் மற்றும் ஏனைய புற்றுநோய்களுக்காக சிகிச்சை பெறுபவர்கள் உட்பட)
3. குருதியுடன் தொடர்படைய நோய்நிலைமைகள்
4. அகச்சுரப்புக்கள் தொடர்பான நோய்நிலைமைகள்
5. நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகள்
6. பிறப்பில் ஏற்பட்ட மரபணு குறைபாடு உள்ளவர்கள்
7. வேறு ஏதாவது மரபணு அனுசேப அசாதாரணநிலைமையுடையவர்கள்
8. நாட்பட்ட இதய நோய்நிலைமைகள்
9. நாட்பட்ட சுவாச நோய்நிலைமைகள்
10. நாட்பட்ட சிறுநீரக தொகுதியுடன் தொடர்புடைய நோய்நிலைமைகள்
11. நாட்பட்ட உணவுக்கால்வாய் மற்றும் ஈரல் தொடர்பான நோய் நிலைமைகள்
12. நாட்பட்ட மூட்டுவாத நோய்நிலைமைகள்
13. நாட்பட்ட உளநல பிரச்சனைகள் உடையவர்கள்
14. வேறு ஏதாவது குறிப்பிடப்பட்ட நோய் நிலைமைகளுக்காக குழந்தைநல மருத்துவ நிபுணர் அல்லது பொது வைத்திய நிபுணரால் தடுப்பூசிக்காக பரிந்துரைக்கப்படுபவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு