கருக்கலைப்பு உரிமையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்து 50 அமெரிக்க மாநிலங்களிலும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
கருக்கலைப்பை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தும் டெக்சாஸ் மாநிலத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்கா முழுபதும் இவ்வாறு பல்லாயிரக்கணக்கானவர்கள் திரண்டுள்ளனர்.
உத்தேச புதிய சட்டத்திருத்தம் 6 வாரங்களுக்கு மேற்பட்ட கருவை கலைப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. அவ்வாறு கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மீது வழக்குத் தொடுக்கும் உரிமையையும் வழங்குகிறது. குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் இதே போன்ற சட்டரீதியான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து பரிசீலித்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையிலேயே கருக்கலைப்பு உரிமையை வலியுறுத்தியும் சட்டரீதியாக அதனைக் தடுக்க வேண்டாம் என வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்து 50 அமெரிக்க மாநிலங்களிலும் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.