முகமது நபி கார்ட்டூனை வரைந்து பெரும் சர்ச்சைக்குள்ளான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லார்ஸ் வில்க்ஸ் விபத்தொன்றில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஸ்வீடனின் மார்கரிட் நகருக்கு அருகில் பொலிஸ் பாதுகாப்புடன் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது ட்ரக்குடன் மோதி விபத்து இடம்பெற்றதாக ஸ்வீடன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் அவருடன் சென்று கொண்டிருந்த இரு பொலிஸாரும் உயிரிழந்தனர். ட்ரக் ஓட்டுநர் காயமடைந்தார்.
இந்த விபத்தின் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
2007-ஆம் ஆண்டில் முகமது நபியின் கார்ட்டூனை இவா் வரைந்தபோது அதற்கு உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவருக்கு ஏராளமான மிரட்டல்கள் வந்ததால் பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அல்-கய்தா இயக்கம் அவரது உயிருக்கு 1 இலட்சம் டொலர் வெகுமதி அளிப்பதாக அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.