Saturday 20th of April 2024 05:28:07 AM GMT

LANGUAGE - TAMIL
.
அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது; எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்!

அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியானது; எஸ்.பி.பி. குறித்து ரஜினி உருக்கம்!


தமிழ் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினழகாந்த் நடித்துள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் அப் பாடலை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குறித்து ரஜினி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.

இதற்குமுன் ரஜினி நடித்த பல படங்களுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். ஆனால், இந்த பாடல் ரஜினிக்காக, எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலாகும். இதுகுறித்து ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

‘45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்த படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்’ என்று தனது சமூக வலைத்தள பதிவில் பதிவு செய்து இருக்கிறார்.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE