Friday 19th of April 2024 11:37:47 PM GMT

LANGUAGE - TAMIL
.
விசேட தேவைக்குட்ப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவில் ஆரம்பம்!

விசேட தேவைக்குட்ப்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவில் ஆரம்பம்!


முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இன்று(04) ஆரம்பமாகி இடம் பெற்றுவருகிறது.

நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விஷேட தேவையுடையவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வட மாகாணத்திலும் அண்மையில் பைசர் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தடுப்பு ஊசி ஏற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

சுகாதாரத் துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இராணுவத்தினர் குறித்த விசேட தேவையுடையவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதற்கான பேருந்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

இன்றைய தினம் புதுக்குடியிருப்பில் இயங்கிவருகின்ற இனிய வாழ்வு இல்லத்தில் வசிக்கின்ற விசேட தேவையுடைய சிறுவர்களும் குறித்ததடுப்பூசியினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE