முல்லைத்தீவு பெரிய குள பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இன்று திங்கட் கிழமை காலை முல்லைத்தீவு பெரிய குள பகுதியில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
நெடுங்கேணியில் இருந்து வெலிஓயா பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் எதுவித காயங்களுக்கும் உள்ளாகாத நிலையில் மோட்டார் சைக்கிள் முற்றுமுழுமையாக சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைய நெடுங்கேணி பொலிசார் முன்னெடுத்து வருகின்றார்கள்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு