முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று 04.10.21 அன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மற்றும் கிடைக்கப்பெற்ற முடிவுகளின் படி 17 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் 3 பேரும்,முள்ளியவளை பிரதேசத்தில் ஒருவரும்,புதுக்குடியிருப்பு பிரதேச்ததில் இருவரும்,ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஒருவரும்,மல்லாவி பிரதேசத்தில் ஆறுபேரும் மாங்குளம் பிரதேசத்தில் ஜந்துபேரும் என புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்சியாக தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வரும் வேளையில் மக்கள் சுகாதார அறிவித்தல்களை பின்பற்றி செயற்படுமாறு சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளார்கள்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு