Tuesday 16th of April 2024 01:38:59 PM GMT

LANGUAGE - TAMIL
-
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் முதலாவது இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் முதலாவது இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!


முல்லைத்தீவு நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கான முதற்கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை நாளை 06.10.21 அன்று முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் ஏற்றப்படவுள்ளதாக முள்ளியவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் அறிவித்துள்ளார்கள்.

காலை 8.00 மணி தொடக்கம் 12.00 மணிவரை இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

20 அகவைக்கு மேற்பட்ட நிரந்தர தற்காலிக குடியிருப்பாளர்கள் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளாதவர்கள் நாளை முதலாவது தடுப்பூசி மற்றும் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நகர் பகுதியினை அண்மிய கிராமங்களில் பலர் முதலாவது தடுப்பூசியினையும் பெற்றுக்கொள்ளாத நிலையில் காணப்படுகின்றார்கள் இன்னிலையில் முள்ளியவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கான அறிவிப்பினை விடுத்து வருகின்றார்கள்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE