Thursday 18th of April 2024 07:59:57 PM GMT

LANGUAGE - TAMIL
.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,  யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை!

சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை!


தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிப்பதற்கு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை அப்பிவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,

ஏழாலை பிரதேசத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலிஸார் வேண்டும்மென்றெ தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இருவரையும் எதிர்வரும் 08.10.2021 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE