ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே இன்று வியாழக்கிழமை இரவு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிலநடுக்கத்தை அடுத்து டோக்கியோவில் கட்டடங்கள் குலுங்கின. தொடர்ந்து சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஜப்பானிய அரச தொலைக்காட்சியான NHK தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை இரவு 10:41 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சிபா மாகாணத்தின் வடமேற்கு பகுதியை மையமாகக் கொண்டிரு்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டோக்கியோவில் சுமார் 250 கட்டடங்களில் மின்சாரம் தடைப்பட்டதாக டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.