Thursday 18th of April 2024 06:54:28 PM GMT

LANGUAGE - TAMIL
.
இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் சேவைகள் நேற்று மீண்டும் இரு மணி நேரங்கள் செயலிழப்பு!

இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் சேவைகள் நேற்று மீண்டும் இரு மணி நேரங்கள் செயலிழப்பு!


பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப் சேவைகள் நேற்று மீண்டும் இரு மணி நேரங்கள் செயலிழந்தன.

ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான சமூக வலைத்தள சேவைகள் நேற்று சிக்கலை எதிர்கொண்ட நிலையில் அதற்காக பேஸ்புக் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

உலகம் முழுவதும் பலருக்கு பேஸ்புக்கின் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகள் இரண்டு மணி நேரங்களுக்குக் கிடைக்கவில்லை.

எனினும் கடந்த திங்கள்கிழமையன்று சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட முடக்கத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என பேஸ்புக் விளக்கம் அளித்துள்ளது. 2 மணி நேரங்களில் சிக்கல்களுக்கு தீா்வு காணப்பட்டு சேவைகள் வழமைக்குத் திரும்பியதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் இயங்காதது குறித்து ருவிட்டர் உள்ளிட்ட வேறு சமூக வலைத்தளங்களில் நேற்று ஏராளமானார் பதிவிட்டிருந்தனர்.

திங்கட்கிழமை ஏற்பட்ட செயலிழப்பு பேஸ்புக்கின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகளை உலகம் எவ்வளவு நம்பியுள்ளது என்பதைத் தெளிவாக நினைவூட்டுகிறது. உலகளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.

தொழில் முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்கள், இன்ஸ்டாகிராமில் அல்லது பேஸ்புக் ஸ்டோர் ப்ரண்ட் மூலம் வணிகம் செய்ய முடியவில்லை என்று கூறினர். இதனால் ஆயிரக்கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு வெளியே, பிரேசில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் உள்ள மக்கள் - நண்பர்கள், குடும்பங்கள், சகாக்கள் அல்லது வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

வட்ஸ்அப்பை உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துகின்றனர் எனவும் பேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE