Friday 19th of April 2024 05:35:36 PM GMT

LANGUAGE - TAMIL
.
பங்களாதேஷில் படகு கவிழ்ந்து 4 சிறுவர்கள் உட்பட ஐவர் பலி!

பங்களாதேஷில் படகு கவிழ்ந்து 4 சிறுவர்கள் உட்பட ஐவர் பலி!


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகர்ப் பகுதியான சவாரில் உள்ள துராக் ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காணமால் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

மூன்று சிறுவர்கள், ஒரு சிறுமி உள்ளிட்ட இரு பெண்களின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் தீயணைப்பு சேவை மற்றும் சிவில் பாதுகாப்பு தலைமையகத்தின் கடமை அதிகாரி கலீதா யாஸ்மின் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை அதிகாலை ஆற்றில் மணல் கடத்தும்கும்பலின் கப்பல் மோதியே சுமார் 18 பேருடன் சென்ற படகு கவிழ்ந்தது. இதனையடுத்து கப்பலில் இருந்த சில பயணிகள் நீந்திக் கரை சோ்ந்ததாக யாஸ்மின் கூறினார். சில பயணிகள் காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடி வருவதாகவும் யாஸ்மின் மேலும் கூறினார்.

பங்களாதேஷில், படகுகள் ஒரு முக்கிய போக்குவரத்து வழிமுறையாக உள்ளன. படகுகளில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதால் அடிக்கடி அங்கு விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE