Thursday 18th of April 2024 10:33:17 PM GMT

LANGUAGE - TAMIL
-
பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் குழு மோதல்! ஐந்து வீடுகள் சேதம்!

பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் குழு மோதல்! ஐந்து வீடுகள் சேதம்!


யாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் இன்று இரவு குழு மோதல் இடம்பெற்றதில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல கிராமங்களிலிருந்து பெருமளவானவர்கள் அழைத்துவரப்பட்டு தமது பகுதி வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்கு உள்ளான மக்கள் தெரிவித்துள்ளனர்.

வன்முறை கட்டுமீறிச் சென்றமையால் பருத்தித்துறை பொலிஸாருக்கு துணையாக நெல்லியடிப் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்தப்பட்ட வீடுகளுக்கு நெருக்கமான வீட்டில் இருந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

சேதவிபரங்கள் நாளை காலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கரவெட்டி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE