Friday 19th of April 2024 10:18:17 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஐபிஎல் - ரி20; இறுதிப்போட்டிக்குத் தெரிவானது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் - ரி20; இறுதிப்போட்டிக்குத் தெரிவானது சென்னை சூப்பர் கிங்ஸ்!


2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கான முதலாவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி கப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி களத் தடுப்பைத் தேர்ந்தெடுத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 இலக்குகளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

டெல்லி அணி சார்பாக ப்ரித்வி ஷா 60 ஓட்டங்களையும், ரிஷப் பண்ட் (அணித்தலைவர்) 51 ஓட்டங்களையும், சிம்ரன் ஹெட்மியர் 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் ஜோஷ் ஹேசில்வுட் 29 ஓட்டங்களுக்கு 02 இலக்குகளைக் கைப்பற்றினார்.

173 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

சென்னை அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 70 ஓட்டங்களையும், ரொபின் உத்தப்பா 63 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் டொம் கர்ரன் 29 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலாவது அணியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE