தென் கொரியாவின் ஆயுதக் குவிப்பும் அமெரிக்காவின் விரோதக் கொள்கைகளுமே தமது ஆயுத மேம்பாட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் கூறியுள்ளார்.
நாங்கள் தற்பாதுகாப்புக்கான மட்டுமே ஆயுதங்களைப் பெருக்குகிறோம். போரைத் தொடங்குவது வடகொரியாவின் நோக்கம் அல்ல எனவும் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் யாருடனும் போரிட விரும்பவில்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் போரைத் திணத்தால் அதனை எதிகொள்ளும் நோக்குடனுமே ஆயுத பலத்தை அதிகரித்து வருகிறோம் எனவும் அவர் கூறினார்.
வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே அமெரிக்காவே பதற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கிம் ஜோங் உன் குற்றம் சாட்டினார்.
வடகொரியா அமெரிக்காவுக்கு விரோதமான நாடல்ல. ஆனால் அதனை நிரூபிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் கிம் ஜோங் உன் குறிப்பிட்டார்.
வடகொரியாவுடன் பேசத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வட கொரியா மீதான தடைகளைத் தளர்த்துவதற்கும் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன் வட கொரியா அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ள வடகொரியா மறுத்துவிட்டது.
வட கொரியாவின் ஏவுகணை மற்றும் அணு திட்டங்களுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. எனினும் இந்தத் தடைகளை வட கொரியா பல முறை மீறியுள்ளது.
வடகொரியா அணு ஆயுதங்களுக்கான புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஒரு அணு உலையை மீண்டும் தொடங்கியதாகத் தோன்றுவதாக கடந்த மாதம் ஐ.நா அணுசக்தி கண்காணிப் அமைப் தெரிவித்தது. இது குறித்து அமைப்பு கவலை வெளியிட்டது.
இதேவேளை, தொற்று நோய் நெருக்கடிக்கு மத்தியில் வட கொரிய பாரிய பொருளாதா நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான எல்லைகளை வட கொரியா மூடியுள்ளதால் பொருளாதார நெருக்கடி தீவிரமாகியுள்ளது.
இந்நிலையில் தன் மீதான தடைகளைத் தளர்த்துவதற்கான ஒரு உபாயமாகவும் வட கொரிய ஆயுத பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.