Tuesday 16th of April 2024 03:09:39 PM GMT

LANGUAGE - TAMIL
.
சேமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 05 பேர் உயிரிழப்பு!

சேமாலியாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் 05 பேர் உயிரிழப்பு!


சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் 06 பேர் காயமடைந்ததாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.

மொகடிஷ் - ஃபாகா சந்திப்பு அருகே உள்ள ஒரு உணவகத்திற்குள் நுழைந்து தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

மொகடிஷ் - ஃபகா சந்தியில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலால் அந்தப் பகுதி அதிர்ந்தது. கட்டங்கள் சிலவும் இந்தத் தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன.

இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்புக் கோரவில்லை. இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE