இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
சுப்ரமணியம் சுவாமி இம்முறை இலங்கை விஜயத்தின் போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.
நேற்று அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற நவராத்திரி நிகழ்விலும் சுப்பிரமணியம் சுவாமி பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.