Thursday 25th of April 2024 12:23:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
4 மாத குழந்தை மற்றும் சிறுவர்கள் ஐவருடன் வடக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா!

4 மாத குழந்தை மற்றும் சிறுவர்கள் ஐவருடன் வடக்கில் மேலும் 27 பேருக்கு கொரோனா!


4 மாத பச்சிளம் குழந்தை மற்றும் 5, 6, 9 வயது சிறுவர்கள் மூவருடன் வட மாகாணத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-13) 147 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

யாழ். மாவட்டத்தில் - 19 பேர்

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் - 11 பேர் (3 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஐவர் உட்பட 11 பேர்)

யாழ். போதனா வைத்தியசாலையில் - 03 பேர்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் - 02 பேர்

கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் - 02 பேர்

நொதேன் சென்றல் ஹொஸ்பிற்றலில் - ஒருவர்

மன்னார் மாவட்டத்தில் - 04 பேர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் - 02 பேர்

மன்னார் (NC) கடற்படை முகாமில் - ஒருவர்

மன்னார் (NW) கடற்படை முகாமில் - ஒருவர்

வவுனியா மாவட்டத்தில் - 02 பேர்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (உயிரிழந்த 79 வயது மூதாட்டி)

நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் - ஒருவர்

மல்லாவி ஆதார வைத்தியசாலையில் - ஒருவர்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் - ஒருவர் (4 மாதங்களேயான பச்சிளம் ஆண் குழந்தை)


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மல்லாவி, மன்னார், பருத்தித்துறை, வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE