Friday 19th of April 2024 12:53:32 PM GMT

LANGUAGE - TAMIL
-
செம்மலைப் பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!

செம்மலைப் பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் மரணம்!


முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட செம்மலைப் பகுதியில் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செம்மலைப் பகுதியில் நீர்நிலை ஒன்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே அவர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய சிறீசங்கர் என்று தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE