Saturday 20th of April 2024 01:35:37 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஜப்பானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது;  இம்மாத இறுதியில் பொதுத் தோ்தல் அறிவிப்பு!

ஜப்பானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது; இம்மாத இறுதியில் பொதுத் தோ்தல் அறிவிப்பு!


ஜப்பானிய பாராளுமன்றத்தை இன்று கலைத்து புதிய பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார்.

அத்துடன், இம்மாதம் 31 ஆம் திகதி நாட்டில் புதிய பாராளுமன்றத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான உத்தியோகபூா்வ தோ்தல் பிரச்சார நடவடிக்கைகள் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளன.

தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை சிறப்பாக சரிசெய்யக்கூடியவர்கள் யார்? என்பதை தோ்தலில் மக்கள் தீர்மானிக்க முடியும் என பிரதமர் புமியோ கிஷிடா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதை செயலில் காண்பிக்க விரும்புகிறோம். இதற்கு பொதுத் தோ்தலை பயன்படுத்த விரும்புகிறோம் எனவும் அவர் தெரிவித்தார். பிரதமர் பொறுப்பேற்று கடந்த 11 நாட்களும் நான் மிகவும் பரபரப்பாக இருந்தேன். எனினும் நான் சோர்வடையவில்லை . நிறைவாகவே உணருகிறேன் எனவும் அவா் குறிப்பிட்டார்.

தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளுக்கான திட்டங்களைக் கொண்ட அரசாங்கத்தை அமைக்கவே வாக்காளர்கள் விரும்புவார்கள் எனவும் புமியோ கிஷிடா குறிப்பிட்டார்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE