Wednesday 24th of April 2024 06:59:38 PM GMT

LANGUAGE - TAMIL
.
காதல் விவகாரத்தால் தோட்டத்துக்குள் அட்டூழியம்! - நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!

காதல் விவகாரத்தால் தோட்டத்துக்குள் அட்டூழியம்! - நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!


இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

காவத்தை, வட்டாபொத்த தோட்டத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வட்டாபொத்த தோட்டத்துக்குள் புகுந்த சிலர் ஓட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியதுடன், அந்தத் தோட்டத்தைச் சேர்ந்த நபர்களையும் தாக்கிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் விவகாரமே மோதலுக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE