Wednesday 24th of April 2024 08:22:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஏழாலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; மற்றொருவர் நீதிமன்றில் தாமாகவே முன்னிலை!

ஏழாலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது; மற்றொருவர் நீதிமன்றில் தாமாகவே முன்னிலை!


ஏழாலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், மற்றொரு சந்தேக நபர் தாமாகவே நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் குறித்த தகவலை சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் தனக்கு அறிவிக்கப்பட்டதாக த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நீதிமன்றில் கைபொப்பம் இடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களுக்கு நிதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் த.கனகராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை வேண்டுமென்றே தப்பிக்கவிட்டனர் என்ற முறைப்பாடு தொடர்பில் 08.10.2021 அன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு, சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோருக்கு அழைப்பாணை அப்பிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE