Thursday 18th of April 2024 04:29:52 PM GMT

LANGUAGE - TAMIL
.
கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!

கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்றுறுதி!


கிளிநொச்சியில் உயிரிழந்த மூதாட்டிகள் இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் இன்று (ஒக்-14) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த மூதாட்டிகளுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்டிருந்த உயிரிழந்த குறித்த மூதாட்டிகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நாகேந்திரம் - தர்மலக்சுமி (வயது-84) மற்றும் சிவநேசன் - கண்மணி (வயது-75) என மருத்துவ அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE