Friday 19th of April 2024 09:54:54 PM GMT

LANGUAGE - TAMIL
.
தாய்வானில் 13 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 46 பேர் கோரப் பலி!

தாய்வானில் 13 மாடிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 46 பேர் கோரப் பலி!


தாய்வான் - காவோஷியங் நகரில் உள்ள 13 மாடி கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி குறைந்தது 46 பேர் உயிரிழந்தனர். அத்துடன், 41 பேர் காயமடை்ததாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

யான்செங் மாவட்டத்தில் உள்ள 40 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் நேற்று வியாழக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் 4 மணி நேரங்களுக்கு மேலாகக் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீப்பரவலைத் தொடர்ந்து கட்டடத்தில் இடம்பெற்ற தேடுதலின்போது இறந்த 46 பேரில் உடல்கள் மீட்கப்பட்டதாக காவோஷியங் தீயணைப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீப்பற்றி எரிந்த பழைமையான கட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பாவனையின்றிக் கைவிடப்பட்டிருந்ததாக கௌஷியாங் நகர மேயர் சென் சி-மாய் தெரிவித்துள்ளார். இக்கட்டத்தில் முன்னர் உணவகங்கள், திரையரங்கு உள்ளிட்டவை இருந்தன.

தீ விபத்துக்காக காரணம் என்ன? என்பது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தாய்வான் அரசாங்கம் அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE