14-வது ஐபிஎல் ரீ-20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில் கிண்ணத்தை கைப்பற்றும் பலப்பரீட்சையில் இன்று சென்னை - கொல்கத்தா அணிகள் ஈடுபட உள்ளன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று வெள்ளிக்கிழமை இரவு அரங்கேறுகிறது.
இதில் முன்னாள் சாம்பியனான டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இயன் மோர்க்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஏற்கனவே மூன்று முறை கிண்ணத்தை வென்ற சென்னை அணி நான்காவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா