மக்கள் மரணப் பொறியில் எனும் வாசகம் அடங்கிய துண்டுபிரசுரங்கள் இன்று காலை திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் முன்பாக தொழில் போராட்ட மத்திய நிலையத்தினரால் பகிர்ந்தளிக்கப்பட்டது.
திருகோணமலையில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்தினை இந்தியாவுக்கு முழுவதுமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளதுடன் இலங்கைக்கு உருத்தான எண்ணெய் தாங்கிகளையும் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அது தொடர்பாக குறித்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை