Thursday 28th of March 2024 07:15:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளோம் - கெஹெலிய

கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளோம் - கெஹெலிய


நாட்டில் கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை வெற்றிகரமான நிலையை அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதற்கு சர்வதேச அளவிலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

யுனிசெப் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் உடன் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.

உலகளாவிய கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையில், சில வளர்ந்த நாடுகள் சிரேஷ்ட குடிமக்களுக்கு சிகிச்சை அளிக்க மறுத்துவிட்ட நிலையில் இந்நாட்டு சிரேஷ்ட குடிமக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE