14வது ஐபிஎல் கிண்ணத்தை வெல்ல வேண்டுமாயின் 193 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை கொல்கத்தாவுக்கு நிர்ணயித்துள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மகுடத்துக்கான இறுதிப்போட்டி துபாயில் இன்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி சென்னை அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சென்னை அணி சார்பில் டூ பிளஸ்ஸி 86, ஹெய்க்வட் 32, ரொபின் உத்தப்பா 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மொயின் அலி ஆட்டமிழக்காது 37 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதையடுத்து 193 ஓட்டங்களை பெற்றால் கிண்ணத்தை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் துடுப்பெடுத்தாடி வரும் கொல்கத்தா அணி சற்று முன்னர் வரை 6 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 55 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகன சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் முறையே 22, 32 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை