2021 இந்தியன் பிரீமியர் லீக் வெற்றிக்கிண்ணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சுவீகரித்துள்ளது.
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 193 ஓட்டங்களை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக பஃவ் டூ ப்ளெய்சிஸ் 86 ஓட்டங்களையும், மோஹின் அலி 37 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சுனில் நராயின் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 193 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நிலையில் 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை மட்டும் பெற்றுக்கொண்டது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இந்தியா