ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களின் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலில் 47 போ் பலியாகினா். 70 பேர் காயமடைந்தனா்.
இந்தத் தாக்குதலை தாங்களே நடத்தியதாக ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது.
காந்தஹாா் நகரிலுள்ள இமாம் பா்கா மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஷியா பிரிவு முஸ்லிம்கள் தொழுகையில் பங்கேற்றிருந்த நிலையில் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அதனை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஆப்கான் அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
முதலில் இரு பயங்கரவாதிகள் மசூதியின் பாதுகாப்பு நுழைவு வாயிலில் குண்டுகளை வெடிக்கச் செய்தனா். பின்னா் அந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி மேலும் இரு பயங்கரவாதிகள் மசூதிக்குள் நுழைந்து, கூட்டத்தின் மத்தியில் வெடிகுண்டை வெடிக்கச் செய்தனா்.
இந்நிலையில் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாக தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் பிலால் கரீமி கூறினார்.
குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸிலுள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 46 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐ.எஸ்.கே பொறுப்பேற்றது.
இந்த நிலையில், ஷியா பிரிவினரைக் குறிவைத்து காந்தஹாா் மசூதியில் தற்போது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அவா்களுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஐ.எஸ்.கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
தலிபான்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் போலவே சன்னி இஸ்லாமியப் பிரிவைச் சோ்ந்தவா்கள் என்றாலும் ஷியா பிரிவினரைப் பாதுகாப்பதாக அந்த அமைப்பினா் உறுதியளித்துள்ளனா்.
எனினும், கடந்த 1990-ஆம் ஆண்டுகளில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்றபோது ஷியா பிரிவினா் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.