சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவர்கள் நினைவாக கிளிநொச்சி மகாவித்தியாலய 2015 உயர்தர மாணவ அணியினரின் ஒழுங்குபடுத்தலில் குருதிக்கொடை முகாம் இன்றைய தினம் இடம்பெற்றது.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இந்த இரத்ததான முகாம் 8 வது வருடமாக இன்றைய தினம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சத்தியமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி எஸ். கருணதீபா, வைத்தியர்கள், கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் நவீன், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி