கிளிநொச்சி கண்டாவளை சுகாதார பணிமனையின் கீழ் உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடுபகுதியில் உள்ள சிறுகுளத்திலிருந்து வெளியேறும் நீர் விசுவமடு சந்தையினுடாக செல்லுவதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
விசுவமடு சந்தையின் உள்பகுதி ஊடாக ஊடறுத்து வரும் கழிவு வாய்க்காலானது விசுவமடு ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு பகுதியில் உள்ள கால்வாயில் கலக்கின்றது.
இதனால் விசுவமடு சந்தையில் அகற்றப்படும் கழிவுகள் மற்றும் விசுவமடு சந்தையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உள்ளிட்டவையும், ஏனைய வியாபாரிகளின் கழிவுகள் இக்கழிவு வாய்க்காலில் வீசப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இக்கழிவுகள் மழை காலங்களில் மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புக்களுக்குள் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி