இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதலாவது தலைவர் பந்துல வர்ணபுர காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுகயீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக தேர்ச்சி பெற்ற டெஸ்ட் அணியாக இலங்கை கிரிக்கெட் அணியை மாற்றிய பெருமை அவரையே சாரும்
திடமான நுட்பத்தைக் கொண்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட பந்துல வர்ணபுர சிறந்த பந்துவீச்சாளராகவும் திகழ்ந்தார்.
1983 - 82 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட அணியுடனான தொடரில் பங்கேற்றமைக்காக அவருக்கு ஆயுட்கால கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டது.
அறுபத்தி எட்டு வயதுடைய பந்துல வர்ணபுர இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை