Friday 19th of April 2024 05:24:35 AM GMT

LANGUAGE - TAMIL
-
ரீ-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று; அயர்லாந்தை 70 ஓட்டங்களால் வெற்றிகொண்டது இலங்கை!

ரீ-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று; அயர்லாந்தை 70 ஓட்டங்களால் வெற்றிகொண்டது இலங்கை!


ரீ-20 உலகக் கிண்ண தகுதிச் சுற்று இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் 8ஆவது போட்டியில் இலங்கை அணி அயர்லாந்து அணியை 70 ஓட்டங்களால் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களை பெற்றுள்ளது.

குசல் பெரேரா சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமெதனையும் பெறாது ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து வந்த தினேஷ் சந்திமல் 6, அவிஷ்க பெர்னாண்டோ 0 ஓட்டத்துடன் அணியின் ஓட்ட எண்ணிக்கை 8 ஆக இருந்தபோது ஆட்டமிழந்து வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் மற்றொரு ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பதும் நிஸங்கவுடன் வனின்டு ஹசரங்க ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை 131 ஆக உயர்த்திய நிலையில் வனின்டு ஹசரங்க 71 ஓட்டங்களுடன் ஆட்மிழந்தார். அடுத்து வந்த பானுக ராஜபக்ஷ 1, சம்மிக்க கருணாரத்னே 2, ஓட்டத்துடன் ஆட்டமிழந்தனர்.

அணித் தலைவர் தசுன் ஷானக ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் ஜோஸ் லிட்டில் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

172 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதையடுத்து இலங்கை அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதிபெற்றது.

அணிசார்பில் அதிகபடியாக அணித்தலைவர் ஆண்ட்ரூ பால்பிர்னி 41 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE