Thursday 25th of April 2024 12:42:31 AM GMT

LANGUAGE - TAMIL
.
கொவிட் தொற்றுநோய் நெருக்கடி 2022 வரை நீடிக்கலாம் என உலக சுகதார அமைப்பு எச்சரிக்கை!

கொவிட் தொற்றுநோய் நெருக்கடி 2022 வரை நீடிக்கலாம் என உலக சுகதார அமைப்பு எச்சரிக்கை!


கொவிட் தொற்றுநோய் நெருக்கடி 2022 வரை நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக உலக சுகதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஏழை நாடுகளுக்குத் தேவையான கொவிட் 19 தடுப்பூசிகள் கிடைக்காததால் எதிர்பார்த்ததை விட தொற்று நோய் நெருக்கடி மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கும் சூழல் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான டாக்டர் ப்ரூஸ் அய்ல்வார்ட் கூறினார்.

உலகில் ஏனைய மற்ற கண்டங்களில் 40% பேர் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளபோதும் ஆப்பிரிக்காவின் மக்கள்தொகையில் 5% க்கும் குறைவானோரே தடுப்பூசி போட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான கொவிட் தடுப்பூசிகள் அதிக வருவாய் அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. உலகளவில் விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகளுடன் ஒப்பிடுகையில் 2.6% மட்டுமே ஆப்பிரிக்க நாடுகளுக்கு கிடைத்துள்ளன.

உலகில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும் பணக்கார நாடுகள் அதிகளவு தடுப்பூசிகளைக் முன்பதிவு செய்து கொள்வனவு செய்வதால் இத்திட்டத்துக்குத் தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் தடுப்பூசிகளை கோவாக்ஸ் திட்டத்தின் ஊடாக விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் இதுவரை இத்திட்டத்தின் ஊடாக 371 மில்லியன் தடுப்பூசிகளே விநியோகிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19)



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE