இலங்கையில் மேலும் நூற்றுக் கணக்கானொருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மேலும் 453 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு, இன்று (21) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட்-19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 533,758 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 500,000ஐ கடந்தது.
கடந்த 24 மணித்தியாலங்களில் கொவிட் தொற்றிலிருந்து 8,790 பேர் குணமடைந்திருந்தனர்.
இதனையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 502,464 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை