Saturday 20th of April 2024 09:49:10 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரீ-20 உலகக் கிண்ணம்; 2வது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி!

ரீ-20 உலகக் கிண்ணம்; 2வது போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி!


ரீ-20 உலகக் கிண்ண போட்டித் தொடரில் சந்தித்த 2வது போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டமொன்றில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது.

அதிகபட்சமாக மிட்செல் மற்றும் டேவன் கான்வே தலா 27 ஓட்டங்கை எடுத்தனர்.

பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 135 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது.

பாகிஸ்தான் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 135 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ஆசிப் அலி 27, ஷோயப் மாலிக் 26 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பந்து வீச்சில் இஷ் சோதி 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார.

முதல் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியிருந்த பாகிஸ்தான் இந்த போட்டியில் நியூசிலாந்தை வெற்றி கொண்டதன் மூலம் இரண்டு வெற்றிகளுடன் குழு-2 இல் முதல் இடத்தை பெற்றுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE