ரீ-20 உலகக் கிண்ண போட்டித் தொடரில் சந்தித்த 2வது போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர்-12 சுற்றின் இன்றைய முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து - பங்காதேஷ் அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அவ்வணி சார்பில் முஷ்பிகுர் ரஹீம் 29 ஓட்டங்களையும் மஹமதுல்லாஹ் 19 ஒட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்திருந்த நிலையில் நஷூம் அஹமட் ஆட்டமிழக்காமல் 19 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் டைமல் மில்ஸ் மூன்று விக்கெட்டுக்களை அதிக பட்சமாக வீழ்த்தினார்.
பதிலுக்கு 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜேசன் ரோய் 60 ஓட்டங்களைப் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
டேவின் மாலன் ஆட்டமிழக்காது 28 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதன் மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி எதிர்கொண்ட 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று குழு-1 இல் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து