ரீ-20 உலகக் கிண்ண போட்டியின் சூப்பர்-12 சுற்று போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்கின்றது.
தகுதிச் சுற்று போட்டிகளில் சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து சூப்பர்-12 சுற்றுக்கு தகுதி பெற்ற இலங்கை அணி முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தி வெற்றியுடன் ஆரம்பித்திருந்தது.
பின்னர் அவுஸ்ரேலியா மற்றும் தென்னாபிர்க்க அணிகளுடனான போட்டிகளில் தோல்வியடைந்தது.
இந்நிலையில் ரீ-20 உலகக் கிண்ணத் தொடரின் 29வது ஆட்டமாக இன்று இரவு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இலங்கை அணி.
இலங்கை நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை