Saturday 20th of April 2024 12:33:32 AM GMT

LANGUAGE - TAMIL
.
ரீ-20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 164 ஐ நிர்ணயித்தது இங்கிலாந்து!

ரீ-20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 164 ஐ நிர்ணயித்தது இங்கிலாந்து!


ரீ-20 உலகக் கிண்ண தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணிக்கு 164 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து அணி.

தொடரின் 29வது ஆட்டமாக நடைபெற்று வரும் சூப்பர்-12 சுற்றின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் அபாரமாக துடுப்பெடுத்தாடி இறுதிவரை ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்று சதமடித்திருந்தார்.

67 பந்துகளை எதிர்கொண்டு ஆறு 4 ஓட்டங்கள், ஆறு 6 ஓட்டங்கள் அடங்கலாக 101 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

பந்து வீச்சில் வனின்டு ஹசரங்க 4 ஓவர்கள் பந்துவீசி 21 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

164 என்ற வெற்றி இலக்கு நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 34 ஓட்டங்களை பெற்று விளையாடி வருகிறது.

ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஷங்க 1 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க அடுத்து வந்த அஷலங்க அதிரடியாக துடுபபெடுத்தாடி 16 பந்துகளில் மூன்று 4 ஓட்டங்கள், ஒரு 6 ஓட்டம் அடங்கலாக 21 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

குசல் பெரேரா - 7, அவிஷ்க பெர்னாண்டோ - 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE