ரீ-20 உலகக் கிண்ண தொடர் நடைபெற்று வரும் நிலையில் பந்து வீச்சு, துடுப்பாட்டத்தில் இலங்கை அணி வீரர்கள் முன்னிலையில் உள்ளனர்.
நடப்பு உலகக் கிண்ண தொடரின் சூப்பர்-12 சுற்று தொடரின் 31 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் அதிகூடிய விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர்களில் இலங்கை வீரர் வனின்டு ஹசரங்க முதலிடத்தை பெற்றுள்ளார். மற்றொரு இலங்கை வீரரான மஹீஸ் தீக்ஷன 6 போட்டிகளில் 8 விக்கெட்டுக்களை வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.
அதேபோன்று துடுப்பாட்டத்தில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் முதலிடத்தில் உள்ள நிலையில் இலங்கை வீரர்களான பெத்தும் நிசங்க, சரித் அசலங்க மற்றும் பானுக்க ராஜபக்ஷ ஆகியோர் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முன்னிலையில் உள்ளனர்.
பந்துவீச்சில்....
வனின்டு ஹசரங்க (இலங்கை) - 14 விக்கெட் (7 போட்டிகளில்)
ஷாகிப் அல் ஹசன் (பங்களாதேஷ்) - 11 விக்கெட் (6 போட்டிகளில்)
ஜோஸ் டவேய் (ஸ்கொட்லாந்து) - 09 விக்கெட் (5 போட்டிகளில்
துடுப்பாட்டத்தில்....
ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து) - 214 ஓட்டங்கள் (4 போட்டிகளில்)
மொஹமட் ரிஷ்வான் (பாகிஸ்தான்) - 199 (4 போட்டிகளில்)
பாபர் அஸாம் (பாகிஸ்தான்) - 198 (4 போட்டிகளில்)
Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை