நமீபியாவை வென்று ரீ-20 உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது நியூசிலாந்து அணி.
ரீ-20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற சூப்பர் 12 போட்டியில் நமீபியாவை எதிர்த்தாடிய நியூசிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிச் செய்தது.
நாணய சுழற்சியில் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தடுமாற்றமான நிலையில் இருந்து இறுதியில் மீண்டது.
முதல் 4 ஓவரில் 30 ஓட்டங்களை எடுத்திருந்த நியூசிலாந்து அணி அதன்பின் தடுமாறியது. 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ஓட்டங்கள் எடுத்திருந்தது. 16 ஓவர் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் என்ற நிலையில் இருந்தது.
17-வது ஓவரில் இருந்து ஜேம்ஸ் நீசம், கிளென் பிலிப்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆட்டம் நமீபியாவிடம் இருந்து விலகிச் சென்றது.
17-வது ஓவரில் நியூசிலாந்து 14 ஓட்டங்களும், 18-வது ஓவரில் 21 ஓட்டங்களும், 19-வது ஓவரில் 14 ஓட்டங்களும், கடைசி ஓவரில் 18 ஓட்டங்களும் விளாசியது. கடைசி நான்கு ஓவரில் 67 ஓட்டங்கள் குவித்தது. இதனால் நியூசிலாந்து 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து நமீபியா அணி 164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. அந்த அணியால் 20 ஓவரில் 111 ஓட்டங்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதனால் நியூசிலாந்து 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நமீபியா விக்கெட்டுகளை இழக்கவில்லை என்றாலும், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. நமீபியா அணியின் தொடக்க வீரர் லிங்கன் 25 ஓட்டங்களும், ஸ்டீபன் பார்ட் 21 ஓட்டங்களும், விக்கெட் கீப்பர் க்ரீன் 23 ஓட்டங்களும், டேவிட் வீஸ் 16 ஓட்டங்களும் சேர்த்தனர்.
நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி, டிரென்ட் பவுல்ட் தலா 2 விக்கெட்டுக்களையும், மிட்செல் சான்ட்னெர், நீஷம், இஷ் சோதி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தா வெற்றியின் மூலம் குழு-2 இல் அரையிறுதிக்கான வாய்ப்பினை நியூசிலாந்து உறுதி செய்துள்ளது.
ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி முன்னதாகவே 4 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 2வது அணிக்கான போட்டியில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய ஆகிய அணிகள் போட்டியில் இருந்தன.
இந்நிலையில் இன்றைய நமீபியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளை பெற்றுள்ள நியூசிலாந்து அரையிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகளுடனும், இந்திய அணி 3 போட்டிகளில் விளையாடி 2 புள்ளிகளுடனும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: நியூசிலாந்து