Friday 29th of March 2024 05:47:33 AM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்திற்கு வெற்றி இலக்காக 167ஐ நிர்ணயித்தது இங்கிலாந்து!

முதலாவது அரையிறுதியில் நியூசிலாந்திற்கு வெற்றி இலக்காக 167ஐ நிர்ணயித்தது இங்கிலாந்து!


ரீ-20 உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தடிய இங்கிலாந்து அணி 166 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ரீ-20 உலகக் கிண்ண தொடரின் முதலாவது அரையிறுதி அட்டம் இன்று ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.

குழு-01 இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை முதலில் துடுபபெடுத்தாட அழைத்தது.

இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 166 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அதிகபட்சமாக டேவிட் மாலன் 41 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, மொயின் அலி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதையடுத்து 167 ஓட்டங்களை எடுத்தால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறமுடியும் என்ற நிலையில் நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE