Thursday 18th of April 2024 06:16:24 PM GMT

LANGUAGE - TAMIL
-
இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!


உலகக் கிண்ணம் - இருபதுக்கு இருபது இறுதிப்போட்டிக்கான முதலாவது அணியாக நியூசிலாந்து அணி தெரிவாகியுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கான தகுதியைப் பெற்றுக்கொண்டது.

இன்று நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

167 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதன் மூலம் நியூசிலாந்து அணி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE