ரீ-20 உலகக் கிண்ண தொடரின் 2வது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.
2வது அரையிறுதி ஆட்டத்தில் குழு-01 இல் இருந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்த பாகிஸ்தான் - அவுஸ்ரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி சற்று முன்னர் வரை 6 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 47 ஓட்டங்களை பெற்று விளையாடி வருகின்றது.
ஆரம்பத் துடு:ப்பாட்ட வீரர்களான பாபர் அசாம் - 24, மொஹமட் ரிஷ்வான் - 21 ஓட்டங்களுடன் ஆடிவருகின்றனர்.
Category: விளையாட்டு, புதிது
Tags: ஆஸ்திரேலியா