Friday 19th of April 2024 01:44:49 AM GMT

LANGUAGE - TAMIL
-
நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்தில்  ஆயுததாரிகளால் 15 பேர் சுட்டுக் கொலை!

நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்தில் ஆயுததாரிகளால் 15 பேர் சுட்டுக் கொலை!


நைஜீரியாவின் சோகோடோ மாகாணத்தில் ஆயுததாரிகள் கண்மூடித்தனமாக பொதுமக்களை இலக்குவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை அதிகாலை வரை நைஜர் குடியரசின் எல்லையோர நகரமான இல்லேலாவில் ஆயுதம் தாங்கிய குழுவினர் பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இங்கு மட்டும் 13 பேர் பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்துடன், சோகோடோ மாகாண தலைநகருக்கு கிழக்கே 76 கி.மீ. தொலைவில் உள்ள கோரோன்யோவில் இருவர் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர்களை "பயங்கரவாதிகள் மாற்றும் கொள்ளையர்கள்" என சோகோடோ மாநில ஆளுநர் அமினு வசிரி தம்புவால் விவரித்தார்.

நைஜீரியாவின் வடமேற்கில் அதிகரித்துள்ள வன்முறைகளை ஒடுக்க இராணுவம் அதிகளவில் களமிறக்கப்பட்டுள்ளபோதும் ஆயுததாரிகள் அங்கு அவ்வப்போது வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியாவில் பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அண்மையில் 30 போ் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அடுத்த சில நாள்களில் சோகோடோ மாகாணத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவின் வடமேற்கு மத்திய மாகாணங்களில் நடைபெற்று வரும் வன்முறைக்கு இவ்வாண்டில் மட்டும் நூற்றுக்கணக்கானோா் பலியாகியுள்ளனர்.

காலங்காலமாக கால்நடைகளை மேய்த்துக்கொண்டு, நாடோடியாக வாழ்ந்த பலானி இனத்தைச் சோ்ந்த இளைஞா்களே இவ்வாறு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹவுஸா என்ற விவசாய பிரிவினருடன் தண்ணீருக்காகவும், நிலத்துக்காகவும் அவா்கள் மோதல்போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனா் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனா்.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE